Wednesday, July 22, 2009
Wednesday, July 8, 2009
தேன் கூடு
நிலவாக நீ,உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன
நட்சத்திரங்கள்..
கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன
என் தவறுகள்
தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.
ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,
கலைத்துவிட்ட தேன் கூட்டை போல
Saturday, June 27, 2009
உன் முகவரி
காலைப்பனி - உன் திரை திறக்கும் இமையின் வரவேற்புகாலை தென்றல் - உன் மூச்சுக்காற்றின் முகவரி
மாலை வெய்யில் - உன் கோபத்தின் குவியல்
இரவு நேர கனவு - உன் இதயத்தின் தேடல்
Sunday, June 21, 2009
வர்ணங்கள்

வானவில்லை வரைந்தேன்...
துயிலே உன்னை சுகமாக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளை கொடுத்தேன்....
நிலவே உன்னை அழகாக்க நினைத்தேன்
அவளின் நெற்றிபொட்டை உனக்கு வைத்தேன்..
காதலே உன்னை மறவாதிருக்க நினைத்தேன்
அவளின் நினைவுகளோடு இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்....
Friday, June 19, 2009
உன்னைப்பற்றி...
உன் மூச்சுக்காற்றின் முகவரி
மாலை வெய்யில்,
உன் கோபத்தின் குவியல்
இரவின் கனவு,
உன் இதயத்தின் தேடல்
காலைப்பனி,
உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு
Saturday, May 16, 2009
என் உயிர் தோழியே
கண்டேன் கண்டேன் உன்னை கண்டேன் கண்ட நாள் முதல் நட்பு கொண்டேன்
வெட்கத்தின் உருவமும் நீ,
துக்கத்தின் தூரமும் நீ,
கோபத்தின் பிறப்பிடம் நீ,
நட்பின் இருப்பிடம் நீ,
கொலுசெழுப்பும் ஓசையும் நீ,
எழுத முடியா பாஷையும் நீ,
அன்னைபோல் அரவணைத்தவளும் நீ,
அக்கா போல் அறிவுறுத்தியவளும் நீ,
பெண் நட்புக்கு இலக்கணம் நீ...
Saturday, May 9, 2009
என் நினைவுகள்
* என் கண்கள் கலங்கும் போது, கண்ணீராக வருகிறாய்...
* சிரிக்கும் போது,
புன்னகையாக வருகிறாய்...
* எழுதும் போது,
கவியாக வருகிறாய்...
* நான் எங்கு சென்றாலும் நீ
என்னுடனே வருகிறாய்....
$ என் நிழலாய், நினைவுகளாய் $
Wednesday, May 6, 2009
எதிரிகள்
எனக்குள்ளே தான் எத்தனை எதிரிகள்
என் எழுதுகோல் கூட
உனைப்பற்றி தான் எழுதுகிறது....
உன் நினைவுகள்
உன் நினைவுகளுக்குஉயிர் இருப்பது
இன்றுதன் எனக்கு தெரிந்தது!!!
ஏனென்றால்,
என் வாழ்க்கையில் அல்லவா அது
விளையாடுகிறது........
ரசனை
என் கண்களுக்குத்தான் எத்தனை ரசனை,,,,,,
இமை மூடிய பிறகுதான் அது உன்னை தரிசிக்கிறது
நம்பிக்கை
உயரமாக இருக்கும் கட்டிடத்தினை பார்க்கும் போது
எனக்குள் கர்வம் ஏற்படும்
நானும் இப்படி உயர்ந்து நிற்பேன், ஒருநாள்
அந்த உச்சி தளத்தில்
அழகு
கனவும் அழகு, என் உறக்கத்தினால்
மாலை அழகு, உன் துறக்கத்தினால்
காற்றும் அழகு, உன்னோடு நடப்பதினால்
இதயம் அழகு, உனக்காக துடிப்பதினால்
உன்னை நினைக்கிறேன்
உனக்கும் எனக்கும் என்னடி பந்தம்,
இருந்தும், உன் நினைவுகள் எனக்கே சொந்தம்
உயிருக்குள் ஏதோ சத்தம்,
அது கனவினில் நீ கொடுத்த முத்தம்..
தினம் உன்னை நினைக்கிறேன்...
நித்தம்' நித்தம்'
என் காதலை சொல்ல
நான் தினமும் உன்னை தேடி அலைகிறேன்,
அந்த நிலவினைபோல..........
சுற்றிதிரிகிறேன்,
பூமியைபோல.........
கண்ணீர் வடிக்கிறேன்,
மேகத்தைபோல.........
கதறி அழுகிறேன்,
இடியைபோல...........
என் காதலை உன்னிடத்தில் சொல்ல
Tuesday, April 28, 2009
என்னோடு நீ இரு
உன் நினைவாக நான் இருப்பேன்,.......
கனவாக நீ இரு,
துயிலாக நான் இருப்பேன்,.......
வினாவாக நீ இரு,
விடையாக நான் இருப்பேன்,...........
உயிராக நீ இரு,
உன்னுள் உணர்வாக நான் இருப்பேன்,.......
இப்போது தனிமைகள் என்னை சுடுகின்றன....
பயணங்கள் உ ன்னை நினைக்க வைக்கின்றன...........
என்னோடு நீ இரு,
என் கனவிலாவது...................................
கவிதைக்காலம்
உன் கோபத்தை
மழை காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கண்ணீரை
இலையுதிர் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் கருணையை
குளிர் காலம் ஞாபகபடுத்துகிறது
உன் குணத்தின் மேன்மையை
என் கவிதைக்காலம் என்றுமே
ஞாபகபடுத்தும் உன்னை
உன் நினைவுகள்
மிதக்கின்றன - கண்நீர்கடலில்
கப்பலாக்கி விடாதே-மூழ்கிவிடும்
நிலவாக்கிவிடு - என்றும் உன் நினைவில்
புதிய தத்துவம்
நேசிக்கும் ஒன்றை,
நீ விட்டு சென்றாலும்,
அது உன்னை தேடி வரும்
இரவு
மனதினை திறந்து
உன் கனவினை பார்
வண்ணத்து பூச்சி பறந்து திரிவதை போல
உன் சிந்தனைகளையும் பறக்க விடு
அது சுற்றிதிரியட்டும் இந்த உலகத்தை
கடந்தும்
Tuesday, February 17, 2009
பிரியா விடை

பிரிவு நம்மை பிரித்தாலும்
உறவு நம்மை இணைக்கிறது
ஆம், நட்பெனும் உறவு
இரு உள்ளங்கள் இணைக்கும்
காதலிலும் தோல்வியுண்டு
நட்பில் அது இல்லை
என் புரிந்துகொள்....
நண்பனே,
அண்டங்களில் மிதக்கும்
பூமியெனும் உருண்டையில்
ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு
உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது..
நட்பே,
உன்னைப்பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்,
கிடைக்கவில்லை!
நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்
உன்னிடத்தில் எதையும் எதிர் பாராதது! என
இலைச்சருகுகள் என்னவோ
காய்தலை அறியாது,
நானும் உன் பிரிவை
இதுவரை அறியவில்லை,
காதலனாய் இருந்துப்பார்
முடியாது மனதினை கட்டுப்படுத்த
தூய நண்பனாய் இருந்து பார்
முடியாது அவனிடம் பொய் சொல்ல...
இவ்வுலகினில்,
காதலின்றி வாழ்வது கடினம்
நட்பின்றி வாழ்வது மிககடினம்
எங்கெங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ படித்தோம்
கல்லூரியில் இணைந்தோம்
நட்போடு மகிழ்ந்தோம்
குடும்பமாய் வாழ்ந்தோம்
சிறு கண்ணீரோடு பிரிவோம்
உண்மை கவிதை எழுத்தினில் தெரியும்
உண்மை காதல் மனதினை அறியும்
உண்மை உறவுகள் வறுமையில் தெரியும்
உண்மை நட்பு துன்பத்தினில் புரியும்
காதலுக்கு எல்லை உண்டு
நட்புக்கு அது இல்லை.....

நண்பனே உனக்காக,,,,
வார்த்தைதுளிகளோடு
கண்ணீர்துளிகளும்....................
Thursday, February 5, 2009
எழுத்துக்கள்

என் கவிகளை உனக்கு அனுப்பினேன்
நீ படிப்பதற்காக மட்டுமல்ல
என் எழுத்துக்கள் உன்னை பார்க்க விரும்பியதால்...........
Tuesday, February 3, 2009
உண்மைக்காதல்
யுத்தத்தில் தொடங்கிமுத்தத்தில் உதிர்ந்து
மணக்கோலத்தில் நுழைந்து
மலர்ப்பக்கத்தில் இருந்து
ஈரைந்து மாதத்தை கடந்து
மழலை சப்தத்திலும் முடியாதது
காதல்........................
Monday, February 2, 2009
கர்வம்
பார்க்கும்போது எனக்குள் ஒரு
கர்வம் ஏற்படும்.............
நானும் இப்படி ஒருநாள்
உயர்ந்து நிற்பேன் உன்மீதேறி........


