
Thursday, August 12, 2010
Monday, August 9, 2010
உங்களுக்காக நான்
Saturday, August 7, 2010
Thursday, August 5, 2010
நண்பனே உனக்காக...
நம்மை பிரித்தாலும்பிரிவு
உறவு நம்மை இணைக்கிறது
ஆம், நட்பெனும் உறவு
இரு உள்ளங்களை இணைக்கும்
காதலிலும் தோல்வியுண்டு
நட்பில் அது இல்லை ...
நண்பனே,நட்பே,அண்டங்களில் மிதக்கும்
பூமியெனும் உருண்டையில்
ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு,
உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது...
உன்னை பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்
கிடைக்கவில்லை!!!
நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்...
உன்னிடத்தில் எதையும் எதிர்பாராதது!!! என
இவ்வுலகினில்,இலைச்சருகுகள் என்னவோ
காய்தலை அறியாது,
நானும் உன் பிரிவை,
இதுவரை அறியவில்லை...
காதலனாய் இருந்துப்பார்,
முடியாது மனதின கட்டுபடுத்த...
தூய நண்பனாய் இருந்துப்பார்,
முடியாது அவனிடம் பொய் சொல்ல...
காதலின்றி வாழ்த்திட இயலும்
நட்பின்றி வாழ்வது கடினம்,
நம் வாழ்வில் கடைசிவரை நீடிக்கும்
ஒரே உறவு - நட்பு
எங்கெங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ படித்தோம்
கல்லூரியில் இணைந்தோம்
நட்போடு மகிழ்ந்தோம்
குடும்பமாய் வாழ்ந்தோம்
சிறு கண்ணீரோடு பிரிவோம்....
உண்மை கவிதை எழுதினால் தெரியும்,
உண்மை காதல் மனதினை அறியும்,
உன்னை உறவுகள் வறுமையில் தெரியும்,
உன்னை நட்பு துன்பதினில் புரியும்...
காதலுக்கு எல்லை உண்டு
நம் பார்வைக்குள் அடங்காத
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கு அது இல்லை
நட்பு உறவுகளை விட மேலானது
வறுமையிலும் மாறாதது...
என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்
Wednesday, August 4, 2010
பூவை சுற்றிவரும் வண்ணத்துபூச்சி போல
என்னை சுற்றித்திரிகின்றன
உன் நினைவுகள்;
அவை இருட்டில் கூட என்னை
விட்டு செல்ல விரும்பவில்லை;;;;
Monday, August 2, 2010
என்றும் நட்புடன்
என் தலை சாய, உன் மடி வேண்டும் - இது காதல் என் தலை சாய, உன் தோள் வேண்டும் - இது நட்பு
நட்பு உறவுகளை விட மேலானது
இவ்வுலகினில் இனி நட்பே மொழியாகட்டும்
- என்றும் நட்புடன்
Friday, July 23, 2010
Wednesday, July 21, 2010
நம் நட்பு

*** இருவரும் சிரித்தோம் ***
Tuesday, July 20, 2010
எனக்கு பிடித்தவை:)
எனக்கு பிடித்தவை:) Monday, July 19, 2010
நட்பு

நினைவுகள் என்றும் பிரிவதில்லை
அதை,
நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை
நட்பும் அதை போலதான்.....
அவர்களை பிரிந்த பின்பு,
காலம் கடந்து,
நம் வாழ்க்கை சரித்திரத்தை
புரட்டி பார்க்கும் போது,
இனிய நினைவுகளாய் இந்த "slam book "
உங்கள் வாழ்க்கையில் வீற்றிருக்கும்....
என்றும் உங்கள் நினைவுகள் மலர....
மலரும் நினைவுகளாய்
Tuesday, July 13, 2010
முயற்சி
மனிதா,
உன் மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல
உன் முயற்சி நின்றால் கூட மரணம் தான்
- Dr.A.P.J. அப்துல் கலாம்.
Monday, July 12, 2010
பூவை சூடிக்கொள்ளாதே
Friday, July 9, 2010
என் இதயம்
என் இதயம் எனக்கு துரோகிThursday, July 8, 2010
என் நினைவில்

நான்
விழித்தெழும்போது நீ பனியாக வருகிறாய்
அருந்தும்போது சுவையாக வருகிறாய்
உண்ணும்போது மணமாக வருகிறாய்
படிக்கும்போது கவிதையாக வருகிறாய்
எழுதும்போது தமிழாக வருகிறாய்
பேசும்போது வார்த்தையாக வருகிறாய்
சுவாசிக்கும்போது காற்றாக வருகிறாய்
உதவும்போது கரமாக வருகிறாய்
உறங்கும்போது கனவாக வருகிறாய்
என்று நீ
என் மனைவியாக போகிறாய்.....
Tuesday, July 6, 2010
அடையாளம்

வெட்கம் பெண்மையின் அடையாளம்
கனவு அது உந்தன் அடையாளம்
கவிதை இது எந்தன் அடையாளம்











