காதலி உறங்கினாள்காதல் விழித்தெழுந்தது
வெண்மை நிறத்தினில்...


சில நேரங்களில் சில விஷயங்கள்
நமக்கு அனுபவத்தை கொடுக்கும்.....
சில நேரங்களில் சில அனுபவங்கள்
நமக்கு பலவற்றை கற்றுகொடுக்கும்...
உன்னை பார்த்த முதல் கவிதை எழுதினேன்
மழை துளியே நீ
அழகாய் இருக்கிறாய்
என்னவளின் நெற்றி பொட்டைபோல..
வானவில்லே,
நீயும் அழகாய் இருக்கிறாய்
என்னவளின் ஆடையை போல
கடல் அலை என் கவிதையாக,மழைத்துளிமுற்றுபுள்ளி ஆனாலும்,
பனிக்காற்று வீசிகொண்டிருக்கும்
என் கவிதை வரிகளில்...

நிலவாக நீ,உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன
நட்சத்திரங்கள்..
கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன
என் தவறுகள்
தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.
ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,
கலைத்துவிட்ட தேன் கூட்டை போல
காலைப்பனி - உன் திரை திறக்கும் இமையின் வரவேற்புகாலை தென்றல் - உன் மூச்சுக்காற்றின் முகவரி
மாலை வெய்யில் - உன் கோபத்தின் குவியல்
இரவு நேர கனவு - உன் இதயத்தின் தேடல்

உன் மூச்சுக்காற்றின் முகவரி
மாலை வெய்யில்,
உன் கோபத்தின் குவியல்
இரவின் கனவு,
உன் இதயத்தின் தேடல்
காலைப்பனி,
உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு
கண்டேன் கண்டேன் உன்னை கண்டேன் கண்ட நாள் முதல் நட்பு கொண்டேன்
வெட்கத்தின் உருவமும் நீ,
துக்கத்தின் தூரமும் நீ,
கோபத்தின் பிறப்பிடம் நீ,
நட்பின் இருப்பிடம் நீ,
கொலுசெழுப்பும் ஓசையும் நீ,
எழுத முடியா பாஷையும் நீ,
அன்னைபோல் அரவணைத்தவளும் நீ,
அக்கா போல் அறிவுறுத்தியவளும் நீ,
பெண் நட்புக்கு இலக்கணம் நீ...
* என் கண்கள் கலங்கும் போது, எனக்குள்ளே தான் எத்தனை எதிரிகள்
என் எழுதுகோல் கூட
உனைப்பற்றி தான் எழுதுகிறது....
உன் நினைவுகளுக்குஉயிர் இருப்பது
இன்றுதன் எனக்கு தெரிந்தது!!!
ஏனென்றால்,
என் வாழ்க்கையில் அல்லவா அது
விளையாடுகிறது........
என் கண்களுக்குத்தான் எத்தனை ரசனை,,,,,,
இமை மூடிய பிறகுதான் அது உன்னை தரிசிக்கிறது
உயரமாக இருக்கும் கட்டிடத்தினை பார்க்கும் போது
எனக்குள் கர்வம் ஏற்படும்
நானும் இப்படி உயர்ந்து நிற்பேன், ஒருநாள்
அந்த உச்சி தளத்தில்
கனவும் அழகு, என் உறக்கத்தினால்
மாலை அழகு, உன் துறக்கத்தினால்
காற்றும் அழகு, உன்னோடு நடப்பதினால்
இதயம் அழகு, உனக்காக துடிப்பதினால்
உனக்கும் எனக்கும் என்னடி பந்தம்,
இருந்தும், உன் நினைவுகள் எனக்கே சொந்தம்
உயிருக்குள் ஏதோ சத்தம்,
அது கனவினில் நீ கொடுத்த முத்தம்..
தினம் உன்னை நினைக்கிறேன்...
நித்தம்' நித்தம்'
நான் தினமும் உன்னை தேடி அலைகிறேன்,
அந்த நிலவினைபோல..........
சுற்றிதிரிகிறேன்,
பூமியைபோல.........
கண்ணீர் வடிக்கிறேன்,
மேகத்தைபோல.........
கதறி அழுகிறேன்,
இடியைபோல...........
என் காதலை உன்னிடத்தில் சொல்ல