
நம்மை பிரித்தாலும்பிரிவு
உறவு நம்மை இணைக்கிறது
ஆம், நட்பெனும் உறவு
இரு உள்ளங்களை இணைக்கும்
காதலிலும் தோல்வியுண்டு
நட்பில் அது இல்லை ...
நண்பனே,நட்பே,அண்டங்களில் மிதக்கும்
பூமியெனும் உருண்டையில்
ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு,
உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது...
உன்னை பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்
கிடைக்கவில்லை!!!
நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்...
உன்னிடத்தில் எதையும் எதிர்பாராதது!!! என
இவ்வுலகினில்,இலைச்சருகுகள் என்னவோ
காய்தலை அறியாது,
நானும் உன் பிரிவை,
இதுவரை அறியவில்லை...
காதலனாய் இருந்துப்பார்,
முடியாது மனதின கட்டுபடுத்த...
தூய நண்பனாய் இருந்துப்பார்,
முடியாது அவனிடம் பொய் சொல்ல...
காதலின்றி வாழ்த்திட இயலும்
நட்பின்றி வாழ்வது கடினம்,
நம் வாழ்வில் கடைசிவரை நீடிக்கும்
ஒரே உறவு - நட்பு
எங்கெங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ படித்தோம்
கல்லூரியில் இணைந்தோம்
நட்போடு மகிழ்ந்தோம்
குடும்பமாய் வாழ்ந்தோம்
சிறு கண்ணீரோடு பிரிவோம்....
உண்மை கவிதை எழுதினால் தெரியும்,
உண்மை காதல் மனதினை அறியும்,
உன்னை உறவுகள் வறுமையில் தெரியும்,
உன்னை நட்பு துன்பதினில் புரியும்...
காதலுக்கு எல்லை உண்டு
நம் பார்வைக்குள் அடங்காத
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கு அது இல்லை
நட்பு உறவுகளை விட மேலானது
வறுமையிலும் மாறாதது...
என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்
No comments:
Post a Comment