நான் இன்று ஒரு கவிஞன் என்று நினைத்துபார்பதற்கு பெருமையாக இருக்கிறது. எல்லோரும் பொதுவாக நினைப்பது என்னவெனில், கவிதை எழுதுபவர் எல்லாம், காதல் வசப்பட்டவர்கள் தான் என நினைக்க தோன்றும்.. அப்படியெல்லாம் இல்லை... காதல் என்பது அன்பு, ஒன்றின் மீது நாம் வைக்கும் ஈடுபாடு, நம்பிக்கை, உணர்ச்சி, ஆசை, கவனம் போன்றவையே நமக்கு அதின் மீது, ஒரு ஈர்ப்பு உண்டாக காரண மாக அமைகிறது... ஒரு விஷயத்தை ஆழமாக நேசித்தால் போதும், அதை பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளலாம், எதை நாம் தெரிந்து கொள்ள வில்லையோ அதை நாம் நேசிக்கவில்லை என்று அர்த்தம். சரி, விஷயத்துக்கு வருவோம், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கையில், எங்கள் economic professor எங்களை, தாய் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வரசொன்னார், அப்போது என் நண்பன் ஒருவன், அழகான தமிழில் ஒரு கவிதை வரைந்தான்... அவனின் ஆர்வமும் கவிதை நயமும், அவன் ஒன்றின் மெத்து வைக்கும் அபிமானமும் எனக்கு மிகவும் பிடித்தது.. அதுவே என்னை கவிதை வரைய தூண்டியது... வாழ்க்கையில், எல்லா மாணவர்களும் பள்ளி, கல்லூரி பருவத்தை கடந்து வருகிறார்கள்... அவள் கடக்கும் பாதையில் பல முட்களும் பல பூக்களும் இருந்திருக்கும்... வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று, இளமைபருவத்திலேயே கற்றுக்கொள்ளத்தான் நமக்கு சொல்லித்தருகிறது.. யார் யாரிடம் பழக வேண்டும், எந்தெந்த தவறான பழக்கத்தை நாம் ஒதுக்கவேண்டியது, யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை பற்றி..... அதுமட்டுமல்ல, வாழக்கையில் நட்பு, காதல் இந்த இரண்டையும் நாம் காண்பது இப்பருவதிலே.... நம் வாழ்க்கை, நம் எண்ணம், நம் சிந்தனை, நம் குணாதிசயம் (கேரக்டர்) நாம் சேரும், நம்மோடு இருக்கும் பழகும் நண்பர்களை பொறுத்தே அமைகிறது..... ஆகவே, பள்ளிபருவத்தில், கற்றுக்கொள்ளுங்கள் நல்லவற்றை, தெரிந்துகொள்ளுங்கள் நல்ல நண்பர்களை, விலகி நில்லுங்கள் தீயவர்களிடம் இருந்து, வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை இன்பமாக...
No comments:
Post a Comment