![]() |
Wednesday, November 3, 2010
Friday, October 29, 2010
Wednesday, September 1, 2010
காத்திருக்கிறேன்
காத்திருத்தல்எனக்கு பிடிக்காத ஒன்று...
எனக்கு பிடிக்கவில்லை...
யாரையும் நான்
இங்கே
நான் பல வருடங்களாக
காத்துகொண்டிருக்கிறேன்
உனக்காக
உன் வருகைக்காக.....
Wednesday, August 18, 2010
Tuesday, August 17, 2010
Monday, August 16, 2010
Saturday, August 14, 2010
கல்வி பற்றி என் கருத்து
கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. கல்வி மனிதனை மனிதனாகவே இருக்க வைக்கிறது.. உலகிலேயே சிறந்தது கண்தானம், ரத்ததானம், அன்னதானம் என்று பல கருத்துக்கள் உண்டு.. ஆனால் உண்மை என்னவென்றால், கல்வி தானம் இந்த மூன்றையும் விட சிறந்தது.. ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு, பாடசாலைக்கு சென்றால் மட்டுமே கிடைப்பதில்லை... நாம் கல்வியை அன்றாடம் பழகும் மனிதர்களிடமிருந்தும், நாம் பேசும், உரையாடும், தவறு செய்யும் சில விஷயங்களிலும் இருந்தும் கற்றுகொள்கிறோம்... நாம் சந்திக்கும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு செயலும், ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித்தருகிறது... அதை சிலர் புரிந்து கொள்ளாமலே கற்கின்றனர்..... ஒரு திறமைமிக்க வல்லரசு நாடு என்பது, நல்ல சமுதாயத்தை கொண்டே அமைகிறது... அது மாணவர் சமுதாயம்... தொழில் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும், வியாபார சக்தியிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் பல நாடுகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தான் இருக்கும்... அந்நாடுகள் கல்வியை ஊக்குவிக்கின்றதோ இல்லையோ, நல்ல கல்வி பயின்ற திறமையுடைய மனிதர்களை வைத்து, நாட்டின் வளர்ச்சியை பெருக்கிகொள்கிறது..... ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியம்... இன்றும் பல கிராமங்களில், பள்ளிகூடங்கள் இல்லாத நிலை நீடித்துகொண்டிருக்கிறது.... அதுமட்டுமல்லாது, பல குழந்தைகள், மாணவர்கள் பல தூரம் பிரயாணித்தும், நடந்து சென்றும் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது... நம் பிரதமர் ஏற்படுத்திய திட்டம், ஊருக்கு ஒரு பள்ளி, ஐந்து கிலோமீட்டர்க்குள் ஒரு பாடசாலை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது... இருந்தும், இன்றும் பல கல்லூரிகளில் சில ஆசிரியர்களும் சரிவர வருவதில்லை, ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை..... நகரங்களில், சில பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சரிவர செல்வதில்லை... தயவு செய்து மாணவர்களே படியுங்கள் உங்களுக்காகவும் நாட்டிற்காகவும்..... கிரிக்கெட்டில் மட்டும் தலை நிமிர்ந்து நின்றால் போதாது, நாட்டின் வளர்ச்சியிலும் நாம் உயர்ந்து நிற்க வேண்டும்..... உங்கள் கல்வி இந்திய ராணுவ படையை விட சக்திவாய்ந்ததாகும்... உங்களின் இன்றைய உழைப்பு (கல்வி) நாளைய இந்திய வரலாறு..... Friday, August 13, 2010
Thursday, August 12, 2010
Monday, August 9, 2010
உங்களுக்காக நான்
Saturday, August 7, 2010
Thursday, August 5, 2010
நண்பனே உனக்காக...
நம்மை பிரித்தாலும்பிரிவு
உறவு நம்மை இணைக்கிறது
ஆம், நட்பெனும் உறவு
இரு உள்ளங்களை இணைக்கும்
காதலிலும் தோல்வியுண்டு
நட்பில் அது இல்லை ...
நண்பனே,நட்பே,அண்டங்களில் மிதக்கும்
பூமியெனும் உருண்டையில்
ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு,
உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது...
உன்னை பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்
கிடைக்கவில்லை!!!
நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்...
உன்னிடத்தில் எதையும் எதிர்பாராதது!!! என
இவ்வுலகினில்,இலைச்சருகுகள் என்னவோ
காய்தலை அறியாது,
நானும் உன் பிரிவை,
இதுவரை அறியவில்லை...
காதலனாய் இருந்துப்பார்,
முடியாது மனதின கட்டுபடுத்த...
தூய நண்பனாய் இருந்துப்பார்,
முடியாது அவனிடம் பொய் சொல்ல...
காதலின்றி வாழ்த்திட இயலும்
நட்பின்றி வாழ்வது கடினம்,
நம் வாழ்வில் கடைசிவரை நீடிக்கும்
ஒரே உறவு - நட்பு
எங்கெங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ படித்தோம்
கல்லூரியில் இணைந்தோம்
நட்போடு மகிழ்ந்தோம்
குடும்பமாய் வாழ்ந்தோம்
சிறு கண்ணீரோடு பிரிவோம்....
உண்மை கவிதை எழுதினால் தெரியும்,
உண்மை காதல் மனதினை அறியும்,
உன்னை உறவுகள் வறுமையில் தெரியும்,
உன்னை நட்பு துன்பதினில் புரியும்...
காதலுக்கு எல்லை உண்டு
நம் பார்வைக்குள் அடங்காத
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கு அது இல்லை
நட்பு உறவுகளை விட மேலானது
வறுமையிலும் மாறாதது...
என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்
Wednesday, August 4, 2010
பூவை சுற்றிவரும் வண்ணத்துபூச்சி போல
என்னை சுற்றித்திரிகின்றன
உன் நினைவுகள்;
அவை இருட்டில் கூட என்னை
விட்டு செல்ல விரும்பவில்லை;;;;
Monday, August 2, 2010
என்றும் நட்புடன்
என் தலை சாய, உன் மடி வேண்டும் - இது காதல் என் தலை சாய, உன் தோள் வேண்டும் - இது நட்பு
நட்பு உறவுகளை விட மேலானது
இவ்வுலகினில் இனி நட்பே மொழியாகட்டும்
- என்றும் நட்புடன்
Friday, July 23, 2010
Wednesday, July 21, 2010
நம் நட்பு

*** இருவரும் சிரித்தோம் ***
Tuesday, July 20, 2010
எனக்கு பிடித்தவை:)
எனக்கு பிடித்தவை:) Monday, July 19, 2010
நட்பு

நினைவுகள் என்றும் பிரிவதில்லை
அதை,
நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை
நட்பும் அதை போலதான்.....
அவர்களை பிரிந்த பின்பு,
காலம் கடந்து,
நம் வாழ்க்கை சரித்திரத்தை
புரட்டி பார்க்கும் போது,
இனிய நினைவுகளாய் இந்த "slam book "
உங்கள் வாழ்க்கையில் வீற்றிருக்கும்....
என்றும் உங்கள் நினைவுகள் மலர....
மலரும் நினைவுகளாய்
Tuesday, July 13, 2010
முயற்சி
மனிதா,
உன் மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல
உன் முயற்சி நின்றால் கூட மரணம் தான்
- Dr.A.P.J. அப்துல் கலாம்.
Monday, July 12, 2010
பூவை சூடிக்கொள்ளாதே
Friday, July 9, 2010
என் இதயம்
என் இதயம் எனக்கு துரோகிThursday, July 8, 2010
என் நினைவில்

நான்
விழித்தெழும்போது நீ பனியாக வருகிறாய்
அருந்தும்போது சுவையாக வருகிறாய்
உண்ணும்போது மணமாக வருகிறாய்
படிக்கும்போது கவிதையாக வருகிறாய்
எழுதும்போது தமிழாக வருகிறாய்
பேசும்போது வார்த்தையாக வருகிறாய்
சுவாசிக்கும்போது காற்றாக வருகிறாய்
உதவும்போது கரமாக வருகிறாய்
உறங்கும்போது கனவாக வருகிறாய்
என்று நீ
என் மனைவியாக போகிறாய்.....
Tuesday, July 6, 2010
அடையாளம்

வெட்கம் பெண்மையின் அடையாளம்
கனவு அது உந்தன் அடையாளம்
கவிதை இது எந்தன் அடையாளம்
Wednesday, June 30, 2010
a bouquet to you

it has green, white and red roses,
white for your patiene
red for your anger
because they felt,
how to live and born beautiful
atleast in next birth like you.
ஞானம்

சில நேரங்களில் சில விஷயங்கள்
நமக்கு அனுபவத்தை கொடுக்கும்.....
சில நேரங்களில் சில அனுபவங்கள்
நமக்கு பலவற்றை கற்றுகொடுக்கும்...
Tuesday, June 29, 2010
நண்பன்
உன்னை பார்த்த முதல் கவிதை எழுதினேன்உன்னை படித்த முதல் உன் ரசிகன் ஆனேன்
உன்னுடன் பழகியதால் அறிஞன் ஆனேன்
உன்னோடு என்றும்
இந்த இனிய நண்பன்
கணேஷ்.சு

























